கடந்த 1970 – 80களில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சுஜாதா. அன்னக்கிளி உள்ளிட்ட சில படங்களின் நடிகர் சிவக்குமாருடன் நடித்திருக்கிறார். பிறகு பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். சினிமாவில் பெரும்பாலும் அவர் ஒரு சோகமான அம்மாவா தான் நடித்திருப்பார். அவரது நிஜ வாழ்க்கையும் அப்படிதான் இருந்துள்ளது. அவரது குடும்ப வாழ்க்கை குறித்து யாருக்குமே தெளிவாக தெரியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, அன்னக்கிளி படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள். அப்போது என் காதுக்குள், இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். அப்படி நல்லா போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு புக் பண்ணுவாங்க. தொடர்ந்து நான் நடிக்கணும்.
இதே சித்ரவதையை அனுபவிக்கணும். வேண்டாம் சார். இந்தப் படம் ஓட வேண்டாம் என்று கண்ணீருடன் சுஜாதா என்னிடம் வேதனையாக சொன்னார். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் விசிட்டுகளில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ, அப்படி பொங்கி, சார் என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்ன்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னால் பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார்.
பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் கொடுத்திடறாங்க. எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க. எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது. மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க.
என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை. இந்த டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு என்று நடிகை சுஜாதா சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை என்று அந்த நேர்காணலில் நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார்.





