- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இடங்களில் எனக்கு நேர்ந்த அவமானங்கள், நான் ஏன் மதம் மாறினேன்? - ஓபன் ஸ்டேட்மென்ட்...

அந்த இடங்களில் எனக்கு நேர்ந்த அவமானங்கள், நான் ஏன் மதம் மாறினேன்? – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் ஜெய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய். பகவதி என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். தொடர்ந்து சென்னை 28 ராஜா ராணி சுப்ரமணியபுரம் கலகலப்பு 2 எங்கேயும் எப்போதும் நீயா 2 என பல படங்களில் ஜெய் நடித்திருக்கிறார். சமீபத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஜெய் ஈடுபட்டார்.

நடிகர் ஜெய் இந்து மதத்தை சார்ந்தவர். தேனிசை தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் ஜெய். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெய் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டார். இது பல பேருக்கும் தெரிய உண்மை.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் ஜெய் நடித்த சட்டென்று மாறுது வானிலை என்ற படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் நடிகர் ஜெய் இன்னும் 2ம் நிலை ஹீரோக்கள் வரிசைக்கு கூட வராமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதுதான் நிஜம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜெய் கூறியதாவது, நான் சபரிமலைக்கு பலமுறை மாலை போட்டு இருக்கிறேன். விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று இருக்கிறேன். ஜீசஸ்க்கு மாலை போட்டு ஒரு வருடம் விரதம் இருந்திருக்கிறேன். அதனால் எல்லா கடவுளையும் நான் மதிப்பவனாக தான் இருந்திருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் கோவிலில் தொடர்ந்து பல அவமானங்களை நான் சந்தித்தேன். இஸ்லாம் மஸ்ஜித்தில் நான் சென்றபோது அங்கு என்னை யாரும் செலிபிரட்டியாக பார்க்கவில்லை. மஸ்ஜித் உள்ளே என்னிடம் யாரும் பேசக்கூட இல்லை. அங்கு கடவுளை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார்கள்.

என்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூட யாரும் கேட்கவில்லை. கோவில்களில் சாமி கும்பிடும்போது பிடித்து தள்ளுவது, சீக்கிரமா கிளம்புங்க என்று பிடிவாதமாக சொல்வது போல எதுவும் அங்கு நடக்க நடப்பதில்லை. அங்கே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பிரார்த்தனைபண்ணலாம் என்று நடிகர் ஜெய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்