தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். நடிகர்கள் கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் அஜீத்குமார் சூர்யா சரத்குமார் முரளி அர்ஜூன் பிரசாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பான சிம்ரன் நடன காட்சிகளில் மிக அழகாக நடனமாடி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமலுடன் பம்மல் கே சம்பந்தம் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் வாலி அவள் வருவாளா பிரியமானவளே துள்ளாத மனமும் துள்ளும் கண்ணுபட போகுதய்யா தமிழ் ஏழுமலை பல வெற்றிப் படங்களில் சிம்ரன் நடித்திருந்தார். ஆல்தோட்ட பூபதி நானடா, பொன்மகள் வந்தாள், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா போன்ற சிறப்பு நடன காட்சிகளிலும் சிம்ரன் நடனமாடியிருக்கிறார்.
திருமணத்துக்கு பிறகு சமீபகாலமாக நடிகை சிம்ரன் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நடிகர் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தில் வில்லி நடிப்பில் சிம்ரன் மிரட்டியிருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்ற படத்திலும் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் சிம்ரன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக திரிஷா நடித்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு ரஜினி சிம்ரன் இணைவது போல படம் இருந்தது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் நடிக்க இருந்ததும் சிம்ரன் தான்.
ஆனால் கால்ஷீட் இல்லாததால் சிம்ரன் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக சிம்ரன் இணைந்து நடித்திருந்தார். ஆனாலும் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர்.
ஆனால் தர்மன் படத்தில் நடிகை சிம்ரனுக்கு மிக முக்கியமான கேரக்டர் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் கமலின் நட்பில் இருந்தவர் சிம்ரன் என்பதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் சிம்ரனுக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிம்ரன் நடிக்க கமிட் ஆன நிலையில் அவருக்கு அட்வான்ஸ் தரப்பட்டுள்ளதால் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்ரனே நாயகியாக தொடர்வதாக தெரிய வந்துள்ளது. மேலும் ரஜினியுடன் 2வது முறை ஜோடி சேரும் வாய்ப்பு என்பதால் சிம்ரனும் இந்த படத்தில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





