- Advertisement -
Homeபொழுதுபோக்குவந்தாச்சு தனுஷ் படத்தின் 50-வது பட போஸ்டர்... டைட்டிலால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்... புகைப்படத்தில் இடம்...

வந்தாச்சு தனுஷ் படத்தின் 50-வது பட போஸ்டர்… டைட்டிலால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்… புகைப்படத்தில் இடம் பெற்ற நடிகர்கள் யார் யார் தெரியுமா…

- Advertisement -

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு என பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் தனுஷ். இவர் முதல் முறையாக பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரண் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் முதியோர்களின் வாழ்வில் வரும் காதலை மிக அழகாக காட்சிப்படுத்தி நம்மை கவர்ந்திருந்தார் தனுஷ்.

ரேவதி, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் இந்த படத்தில் கச்சிதமாக நடித்திருந்தனர். அமைதியான திரைக்கதையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதபடி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்த தனுஷை பலரும் பாராட்டினர். அந்த திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் அவரை நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்கத்திற்கு சிறிது நாட்கள் லீவு விட்டிருந்தார் தனுஷ்.

- Advertisement -

தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். வடசென்னை பகுதியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் தொடங்கிய தனுஷ், ஒரே கட்டமாக எடுத்து நவம்பர் மாதத்தில் முடித்தார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது.

- Advertisement -

அவுட் டோர் காட்சிகளுக்காக, காரைக்குடியில் மட்டும் சில நாட்கள் சூட்டிங்கை நடத்தினார் தனுஷ். இந்த திரைப்படத்தில் மொட்டை கெட் அப்பில் அவர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் அவர் இயக்கினார். காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் அவர் பணிபுரிந்து வருகிறார். இப்படியான சூழலில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ், சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மூவரும் கையில் ஆயுதங்களுடன் இருக்கும் போஸ்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்