நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மெய்யழகன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வா வாத்தியார் என்ற கார்த்தி நடித்த படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான படம் வா வாத்தியார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இயக்குனர் நலன்குமாரசாமி சூது கவ்வும் காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கியவர். தொடர்ந்து இப்போது நடிகர் கார்த்தி ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த வா வாத்தியார் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளனர்.
வா வாத்தியார் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் நலன் குமாரசாமி கூறியதாவது, வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். அவரது பேரனாக கார்த்தி நடித்திருக்கிறார். இந்த படத்தை 1980 – 90களில் எடுக்கப்பட்ட முழு ஆக்சன் மசாலா படங்களைப் போல எடுக்க விரும்பினேன்.
நம் நாட்டில் உணவு கலாச்சாரம் தனித்திருக்கிற மாதிரி தான் திரைப்படங்களும் இருக்கின்றன. நாம் இன்று உருவாக்குகின்ற படங்களுக்கும் அந்த காலத்தில் வந்த தில்லானா மோகனாம்பாள் ரத்தக்கண்ணீர் வரை தொடர்பு உண்டு என்று நம்புகிறேன். இது ஒரு பாரம்பரியம். அந்த பாரம்பரியத்துக்குள் மசாலா படங்கள் வருகின்றன. அதனால் தரமான மசாலா திரைப்படங்களை எடுப்பது ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் நலன் குமாரசாமி கூறியிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் உண்மையான எம்ஜிஆர் ரசிகராக சத்யராஜ் இருந்தும் நடிகர் ராஜ்கிரன் எம்ஜிஆர் ரசிகராக நடித்திருக்கிறார். சமீபமாக ராஜ்கிரண் குணசேகர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தவமாய் தவமிருந்து மெய்யழகன் மாமன் இட்லி கடை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ராஜ்கிரண் அதிக கவனம் பெறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி தாத்தாவாக ராஜ்கிரண் முதன்முறையாக இந்த படத்தில் நடித்துள்ளார். அதுவும் தீவிரமான எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். எம்ஜிஆர் ரசிகரான தனது தாத்தாவிற்கு பேரனால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதை பேரன் கார்த்தி சரி செய்தாரா இல்லையா என்ற கதைக்களத்தில் வா வாத்தியார் படம் உருவாகியுள்ளது. மெய்யழகன் படத்துக்கு பின் வெளியாகும் இந்த படத்தை கார்த்தி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.





