- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் அடுத்த படத்தில் இணைகிறார் தெலுங்கு நடிகர் நானி... அமிதாப் பச்சனும் இருப்பதால் ஜெய் பீம்...

ரஜினியின் அடுத்த படத்தில் இணைகிறார் தெலுங்கு நடிகர் நானி… அமிதாப் பச்சனும் இருப்பதால் ஜெய் பீம் இயக்குனர் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

ஜெயிலர் படத்திற்கு பின் லைகா நிறுவனத்தின் இரு படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் முதல் படமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

இதன்பின் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேலுக்கு கொடுக்கப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்த நிலையில், அனிருத் இசைமையக்க உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டது. ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கொடுத்த ஞானவேல், அடுத்ததாக ரஜினிகாந்திற்கும் நல்ல பெயரை பெற்று கொடுப்பார் என்று சொல்லப்பட்டது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாகவும், இஸ்லாமியரான அவர், காவல்துறை நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய் பீம் படத்திலேயே காவல்துறை அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிய ஞானவேல், ரஜினிகாந்தை வைத்து இன்னும் தீவிரமாக காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே படத்தில் ரஜினிகாந்திற்கு இணையான இரு கதாபாத்திரங்கள் இருப்பதாகவும், அதில் நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்கவும் படக்குழு தீவிரமாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

ரஜினி – அமிதாப் இருவரும் இணைந்து கடைசியாக ஹும் படத்தில் இணைந்து நடித்தனர். அதுவே பிற்காலத்தில் பாட்ஷா படமாக மாற்றப்பட்டது. இதனால் 32 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது புதிய தகவலாக தெலுங்கு நடிகர் நானியும் படத்தில் இணைந்திருப்பதாக பேசப்படுகிறது.

மிகவும் முக்கியமான கதாபாத்திரமான நானி படத்தில் மொத்தமாக 20 நிமிடங்கள் வரை நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தியில் அமிதாப் பச்சன், தெலுங்கில் நானி ஆகியோரை கமிட் செய்துள்ளதால், படம் பான் இந்தியா லெவலில் இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்