இன்றைய கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் பேசுபொருளாக மாறியிருப்பவர் நடிகை திரிஷா தான். 42 வயதான நிலையில் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் அவர், திடீரென நடிகர் விஜயுடன் நேற்று திருமண விழாவில் ஒன்றில் ஜோடியாக பங்கேற்றது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதுவும் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விவாகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படி திரிஷா விஜயுடன் ஜோடியாக ஒரே காரில் ஒரே மாதிரியான டிரஸ்சில் வந்தது பெரிய கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப்பட நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் திரிஷா குறித்து ஒரு நேர்காணலில் பல விஷயங்களை பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
நடிகை திரிஷா குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை திரிஷா ஒரு பெர்பக்ட் ஆன நடிகையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெர்பக்ட் ஆன பெண் என்று நான் சொல்ல மாட்டேன். ஏன்னா அவங்களுக்கு ஏற்கனவே 2 தடவை கல்யாணம் ஆயிட்டு. இது நிறைய பேருக்கு தெரியாது.
முதலில் பாகுபலி வில்லன் நடிகர் ராணாவுடன் கோயிங் ஸ்டெடி லிவிங் டு கெதர் வாழ்க்கை எல்லாம் ரெண்டு பேரும் வாழ்ந்தாங்க. சென்னையில் நடந்த பல விழாக்களுக்கு 2 பேரும் ஒண்ணா வந்தாங்க. ஆனா ராணா தான் என்னவென்று தெரியலே. போம்மா வேலைய பார்த்துட்டுன்னு திரிஷாவை விட்டுட்டார்.
அப்புறம் வருண் மணியன் என்கிற தொழிலதிபரை கல்யாணம் பண்ணிக்க நிச்சயதார்த்தம் வரைக்கும் போனாங்க. திடீர்ன்னு அதுவும் பிரேக்கப் ஆயிடுச்சு. அப்படி 2 முறை அட்டெம்ப்ட் ஆகி பெயில் ஆனவங்க தான் திரிஷா. அப்புறம் புன்னகை பூக்கிற ஒரு முகம். அவங்க அப்பா வந்து ஆந்திரா கிளப்ல மேனேஜரா இருந்தார்.
இன்னும் சொல்லப் போனா திரிஷாவை விட அவங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. திரிஷாவை பொருத்த வரை ஒரு ஆள்மயக்கி என்று கூட சொல்லலாம். இப்போ அவருக்கு 42 வயசு ஆச்சு. இன்னமும் அவர் மேல இருக்கிற க்ரேஸ் குறையலே என்று அந்த நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





