- Advertisement -
Homeபொழுதுபோக்கு59 வயது ஆன நிலையிலும் தனிமையில் வாழ்க்கை… நான் திருமணத்தை தவிர்த்தது ஏன் - ...

59 வயது ஆன நிலையிலும் தனிமையில் வாழ்க்கை… நான் திருமணத்தை தவிர்த்தது ஏன் – பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான்கான் ஓபன்டாக்!

- Advertisement -

இந்திய சினிமாவில் பல அழகான நடிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் அஜீத்குமார் அரவிந்த் சாமி பிரசாந்த் அப்பாஸ் மாதவன் கரண் போன்றவர்கள் இளமையான தோற்றத்தில் ஆணழகன்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டனர். அதை போல இந்தியில் ஆணழகன் நடிகர் என்று கருதபட்டவர் நடிகர் சல்மான்கான். இன்னும் 59 வயதிலும் தோற்றத்தில் பொலிவாக அவர் காணப்படுகிறார்.

நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகில் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. ஏஆர் முருகதாஸ் இப்போது தமிழில் மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சல்மான்கானுக்கு ஒரு தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துக்கொண்டே இருந்ததால் அவரது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அவருக்கு பாதுகாப்பு தந்து வருகின்றனர். மேலும் தனியார் செக்யூரிட்டி அமைப்பின் மூலமாகவும் 70 பேர் அவருக்கு பாதுகாப்பு தருகின்றனர்.

துப்பாக்கி குண்டு துளைக்காத கார்களிலும், குண்டு துளைக்காத உடைகளையும் அணிந்துதான் சல்மான்கான் பொது இடங்களுக்கும், படப்பிடிப்பு தளங்களுக்கும் வந்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சல்மான் அபூர்வா லக்கியா என்ற இயக்குனரின் புதிய படம் ஒன்றில் சல்மான்கான் இராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

- Advertisement -

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அழகான நடிகரான சல்மான்கான், இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. 59 வயதான நிலையிலும் அவர் தனிமையில் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்துக்கொள்ள அவர் ஆர்வமே காட்டவில்லை. சமீபத்தில் நடிகர் சல்மான்கான் தி கிரேட் இந்தியன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் தனது திருமணம் குறித்து பேசியதாவது, நான் திருமணம் செய்துக்கொள்ளாமல் தவிர்க்க முக்கிய காரணம் விவாகரத்து என்கிற பயம்தான். திருமணம் செய்துவிட்டு பிறகு விவாகரத்து செய்யும் சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற பயம் காரணமாகவே, 59 வயதிலும் தனிமையில் வாழ முடிவு செய்துவிட்டேன், என்று பகிரங்கமாக நடிகர் சல்மான்கான் பேசியிருக்கிறார். பெரும்பாலும் பாலிவுட்டில் நடிகர், நடிகையர் திருமணம் ஒரு கட்டத்தில் விவாகரத்தில்தான் முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்