- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சன் டிவியில் வரப் போகுது அரட்டை அரங்கம்… இந்த முறை நிகழ்ச்சியை வழங்கப் போவது...

மீண்டும் சன் டிவியில் வரப் போகுது அரட்டை அரங்கம்… இந்த முறை நிகழ்ச்சியை வழங்கப் போவது யார் தெரியுமா? – அட அந்த இயக்குனரா?

- Advertisement -

இன்று பல டிவி சேனல்களில் தினமும் பலவிதமாக விவாதங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றன. நேரடியாக விவாத நிகழ்ச்சிகளும் விறுவிறுப்பாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக நீயா நானா, தமிழா தமிழா என பல விவாத நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

ஆனால் கடந்த 30 35 ஆண்டுகளுக்கு முன்பாக, இன்றைய விவாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன் உதாரணமாக திகழ்ந்த ஒரு சிறந்த நிகழ்ச்சிதான் சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம். இந்த நிகழ்ச்சியை பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் விசு தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இந்த அரட்டை அரங்கம் நடத்தப்பட்டது மட்டுமின்றி சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற வெளிநாடுகளிலும் சன் டிவி அரட்டை அரங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சமூகத்தில் இருந்த பல்வேறு பிரச்னைகள் அவலங்கள் அரசியல் குறைபாடுகள் மக்களின் அன்றாட தேவைகள் குடும்ப உறவுகளின் பிணக்குகள் என பல விஷயங்களும் இதில் அலசி ஆராயப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரிய கூட்டம் காத்திருக்கும். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வுடன் இயக்குனர் விசு கொண்டு சென்றதுதான் சிறப்பம்சம். பல பிரச்னைகளுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தீர்வும் கிடைத்தது.

- Advertisement -

இந்நிலையில் சன் டிவியில் மீண்டும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் விரைவில் வர உள்ளது. அதற்கான அறிவிப்பை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் இயக்குனர் விசு மறைந்து விட்டதால் அந்த நிகழ்ச்சியை வேறு ஒரு புதுமுகம்தான் நடத்தப் போகிறார். அவர் பிரபல திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் ஜீ தமிழ் டிவியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் மிக்கவர். பிரிவோம் சந்திப்போம் பார்த்திபன் கனவு போன்ற சில படங்களை இயக்கியவர். மேலும் அவர் திமுக ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க கமிட் ஆகியிருக்கிறார். இதில் சமூக அவலங்களை சொல்வது மட்டுமின்றி திமுக அரசின் சாதனைகளையும் இந்த நிகழ்ச்சி வாயிலாக கொண்டு செல்ல சன் டிவி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் விரைவில் தேர்தல் நெருங்கி வருகிறது.

- Advertisement -

சற்று முன்