- Advertisement -
Homeபொழுதுபோக்குகருடன் படம் நாளை ரிலீஸாகிறது, கடைசி நேரத்தில் இப்படி ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டா? இந்த...

கருடன் படம் நாளை ரிலீஸாகிறது, கடைசி நேரத்தில் இப்படி ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டா? இந்த படம் யாருடைய கதை என்பது தெரியுமா – இதுதாம்பா செம டிவிஸ்ட்டு!

- Advertisement -

நடிகர் சூரி நடிப்பில், தமிழ்நாட்டில் நாளை கருடன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை துரை செந்தில் குமார் டைரக்‌ஷன் செய்துள்ளார். சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரத்கேய காட்சி, இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.

பிரிவ்யூ ஷோ பார்த்தவர்கள் கூறுகிற விமர்சனத்தின்படி, இந்த படத்தில் பல விஷயங்கள், ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக இருப்பதாகவும், நிச்சயம் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகவும் கருடன் இருக்கும் என்று பேசப்படுகிறது. அது, நாளை படம் பார்க்கும் பொதுவான ரசிகர்களின் விமர்சனத்தில் உறுதியாகி விட வாய்ப்புள்ளது.

- Advertisement -

துவக்கத்தில் காமெடி நடிகராக தனது திரை பயணத்தை துவக்கிய சூரிக்கு காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் கிடைத்தது சில காட்சிகளில் பத்தோடு பதினொன்றாக நிற்கும் வாய்ப்புதான். ஆனால் வெண்ணிலா கபடிக்குழு படம்தான் அவரது திரை பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, ஏற்றத்தை கொண்டு வந்தது என்றால் மிகையல்ல.

50 பரோட்டா சாப்பிடும் சவால் காட்சியில் நடித்து, அவர் காமெடி நடிப்பில் அசத்தியதால், துவக்கத்தில் அவரது பெயரே பரோட்டோ சூரிதான். பிறகு காமெடியில் முன்னணி நடிகரான பின்பு, பரோட்டா காணாமல் போய் சூரி மட்டுமே நிலைத்துவிட்டார். அவரை வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றிய பின்பு, 2வது படமாக கருடன் நாளை வெளியாகிறது. அடுத்து கொட்டுக்காளி படமும் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம், துவக்கத்தில் வெற்றிமாறன் கதை என்று சொல்லப்பட்டது. ஏனெனில், துரை செந்தில்குமார் ஏற்கனவே கொடி, பட்டாஸ், எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கியவர். பிறகு விடுதலை படத்தில் உதவி இயக்குனராகவும் பணிசெய்தவர். விடுதலை படத்தில் துவக்கத்தில் வரும் ரயில் விபத்து 10 நிமிட காட்சியை இயக்கியவரே துரை செந்தில்குமார்தான்.

ஆனால் கருடன் படம் வெற்றிமாறன் கதை அல்ல. அது ரசிகர்களின் கவனம் ஈர்ப்புக்காக ஒரு பிராண்டட் பெயராக அவரது பெயர் சொல்லப்பட்டது. இது இயக்குனர் துரை செந்தில்குமாரின் கதையும் அல்ல. கருடன் படத்தின் கதை நடிகர் சூரி சொன்னது. அவரது அப்பாவின் உண்மை வாழ்க்கை கதைதான். சூரி சொன்ன ஒரு வரி கதையை டெவலப் செய்து, அதை மையப்படுத்திய ஒரு கதையாக உருவானதுதான் கருடன் என்ற லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக இது வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்