- Advertisement -
Homeபொழுதுபோக்குகம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது - பிக்பாஸ் பார்வதியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு பேசிய...

கம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது – பிக்பாஸ் பார்வதியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு பேசிய பாடகி சுசித்ரா!

- Advertisement -

சினிமாவில் பின்னணி பாடகியாக உள்ள சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துக்கொண்டு பிறகு அவரை விட்டு பிரிந்து விட்டார். அவ்வப்போது தமிழ் சினிமா நடிகர்கள் குறித்து அந்தரங்கமான விமர்சனங்களை வெளிப்படையாக செய்து வருபவர் பாடகி சுசித்ரா. இதனால் அவரது பதிவுகள் எல்லாமே பெரிய அளவில் வைரலாகி விடுகின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து 2 தினங்களுக்கு முன்பு ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் கம்ருதீன் பார்வதி குறித்து பின்னணி பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோவில் பாடகி சுசித்ரா கூறியிருப்பதாவது, பார்வதி ஒரு சுயநலவாதி. இவரை போன்றவர்களின் தாக்கம் எப்போதுமே அதிகமாக தான் இருக்கும். அதுவும் ஏன் என்றால் அவர்கள் அருகில் நாம் இருந்தால்தான். அவர்கள் ஒரு காந்தம் மாதிரி இழுப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் இரும்பு துண்டு மாதிரி. கொஞ்சம் தூரமாக இருந்தால் அவர்களது தாக்கம் மற்றவர்களுக்கு இருக்காது.

ஆனால் அவர்களை நெருங்கி விட்டால் நாமும் அவர்கள் மாதிரி மாறிட வேண்டியதுதான். வெளியே இருந்து யாராவது பிரித்தால் தான் அங்கிருந்து கழண்டு கொள்ள முடியும். இல்லையென்றால் அவர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.

- Advertisement -

அதனால் இந்த மாதிரி ஆட்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும். கார்த்திக் குமார் தனுஷ் உள்ளிட்டோரும் இவர்களைப் போன்றவர்கள்தான். இவர்களை சமாளிக்கலாம் என்றால் நம்மால் முடியாது. சமாளிக்காமல் இருக்க ஒரே வழி அவர்களிடம் குளோஸ் ஆக கூடாது.

அவர்களிடம் நெருக்கமாவதற்கு சிலர் விதிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது பார்வதிக்கு கம்ருதீன் விதிக்கப்பட்டது மாதிரி. கம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு விதிக்கப்பட்டவர்கள். அவர்களோடு ஒட்டட்டும். அன்னியோனியமாக இருக்கட்டும். வாழட்டும் சாகட்டும் என்று பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்