- Advertisement -
Homeபொழுதுபோக்குமுக்கிய நாடுகளின் சினிமா சந்தைகளை குறி வைத்து காய் நகர்த்தும் இயக்குனர் ராஜமவுலி - முந்தைய...

முக்கிய நாடுகளின் சினிமா சந்தைகளை குறி வைத்து காய் நகர்த்தும் இயக்குனர் ராஜமவுலி – முந்தைய படங்களின் வசூலை முந்துமா வாரணாசி?

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற தனது படங்களால் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றவர் இயக்குனர் ராஜமவுலி. இப்போது ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மலையாள நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரமாண்டமான வாரணாசி படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வரும் நிலையிலும் கடந்த ஒரு ஆண்டாக வாரணாசி படத்தின் விளம்பரப் பணிகளில் இயக்குனர் ராஜமவுலி அதிக கவனம் செலுத்தி வருகிறார். வழக்கமான வட அமெரிக்க சந்தையை தாண்டி பிரான்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இரண்டு முக்கிய சர்வதேச சினிமா வர்த்தக சந்தைகளை இயக்குனர் ராஜமௌலி பெரிதும் நம்பி இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான முந்தைய படங்கள் பாகுபலி ஆர்ஆர்ஆர் ஆகியவை வட அமெரிக்காவில் வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும் ஜப்பானிலும் அவரது படங்களுக்கு ஒரு வலுவான சந்தையை உருவாக்க அது உதவியது. ஆனாலும் சீன சினிமா சந்தையில் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

ஆர்ஆர்ஆர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு பிரான்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் கிடைத்த அமோக வரவேற்பை கண்டு வாரணாசி படக்குழுவினர் இந்த சந்தைகளை இலக்காக கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கின்றனர். மேலும் இயக்குனர் ராஜமவுலியும் அவரது படக் குழுவினரும் ஹாலிவுட் சினிமா இதழ்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வாரணாசி படத்தை உலக அளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

உலகளாவிய சினிமா வர்த்தக சந்தையை குறி வைத்தாலும் சர்வதேச விளம்பரங்களில் மிகவும் கவனமான மற்றும் முறையான அணுகுமுறையை படக்குழு தொடர்ந்து கையாண்டு வருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வாரணாசி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

வாரணாசி படத்திற்கு ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி தான் இசையமைக்கிறார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் சர்வதேச சினிமா சந்தைகளை குறி வைத்து தனது வாரணாசி படத்தின் வியாபாரத்தை வலுப்படுத்த இயக்குனர் ராஜமவுலி அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற படங்களை காட்டிலும் வாரணாசி படத்தின் வசூல் பல ஆயிரம் கோடிகளில் இருக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்