தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்தவர் ராஜ்கிரண். பிறகு என் ராசாவின் மனசிலே படம் மூலம் நடிகராக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நடிகை மீனா நாயகியாக அறிமுகமானார். படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண்தான்.
இந்த படத்தில் மாயாண்டி என்ற கேரக்டரில் ராஜ்கிரணும், சோலையம்மா என்ற கேரக்டரில் மீனாவும் நடித்திருந்தனர். காமெடி நடிகர் வடிவேலு நடிகராக அறிமுகமானது இந்த படத்தில்தான். இதில் கவுண்டமணி செந்திலும் காமெடி கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் நடித்த பிறகுதான் ராஜ்கிரண் மீனா மற்றும் வடிவேலு போன்றவர்களின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மீனா தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார். ராஜ்கிரணும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். வடிவேலுவும் பெரிய காமெடி நடிகராக மாறினார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது, ஏதோ ஒரு வாரப்பத்திரிகையில் மீனாவோட புகைப்படம் பார்த்தேன். இந்த பொண்ணு கதாநாயகி கேரக்டருக்கு பொருத்தமா இருக்கும் என்று சொல்லி கஸ்தூரி ராஜாவை கூப்பிட்டு இந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சு போய் பார்த்து பேசி பிக்ஸ் பண்ணுங்க அப்படீன்னு சொன்னேன்.
என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கு. இதுபோய் எப்படி சார் அப்படீன்னாரு. இல்ல இல்ல அந்த சோலையம்மாவோட கதாபாத்திரம் அந்த பயந்த சுபாவம் அதுக்கு இந்த பொண்ணுதான் பொருத்தமா இருக்கும். நீங்க போய் பேசுங்க என்று சொன்னேன். அப்புறம் அவரை கதாநாயகியாக பிக்ஸ் பண்ணியாச்சு.
ஷூட்டிங் வந்தததுக்கு அப்புறம் முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து அந்த படம் ஷூட்டிங் முடியற வரைக்கும் மீனா என்கிட்ட பேசினதே இல்லை. என் கிட்டயே வர மாட்டாங்க. உண்மையிலேயே என்னை பார்த்து பயந்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க அம்மா எவ்வளவோ சொல்லி கன்வின்ஸ் பண்ணியும் கேட்கலே. இல்லேம்மா அவர் ஆளுதான் பார்க்க அப்படி இருக்கார். ரொம்ப தன்மையான மனுஷன் ரொம்ப நல்லவர். எனக்கு தெரியும் என்று எவ்வளவோ அவங்க சொல்லி இருக்காங்க. ஆனா அவங்களுக்கு கடைசி வரைக்கும் அந்த பயம் போகலே என்று நடிகை மீனா குறித்து நடிகர் ராஜ்கிரண் பேசியிருக்கிறார்.





