- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அரசு அதிகாரம், பவர் இருந்தா இவங்க எல்லோருக்கும் ஆயுள் தண்டனைதான், எங்க இருந்துடா வர்றீங்க...

எனக்கு அரசு அதிகாரம், பவர் இருந்தா இவங்க எல்லோருக்கும் ஆயுள் தண்டனைதான், எங்க இருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம் – ஆவேசப்பட்ட நடிகர் ரஞ்சித்

- Advertisement -

நடிகர் ரஞ்சித், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். பல நல்ல படங்களில் தன் திறமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த கலைஞர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். சிந்துநதிப்பூ படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

தொடர்ந்து பாண்டவர் பூமி, பசுபதி மே/பா ராசக்காபாளையம், சபாஷ், கண்ணன் வருவான், பாரதி கண்ணம்மா, நட்புக்காக போன்ற பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்தவர். இப்போது செந்தூரப்பூவே, பாக்கியலட்சுமி போன்ற டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அரசியலில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

நேற்று கோவைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் மனக்கச்சப்பான ஒரு சம்பவம் நடந்துக்கொண்டு இருக்கிறது. அந்த கலாசாரம் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. அதாவது ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு பெண் பிள்ளைகள் அரைகுறை ஆடைகளில் ஆடுகின்றனர். எங்க இருந்துடா நீங்க எல்லாம் வர்றீங்க, என்றே தெரியவில்லை.

கோவை ஆர்எஸ்புரம் போன்ற இடத்தில், ஊருக்குள் நடுவில் இப்படி அரைகுறை ஆடைகளுடன் சினிமா பாட்டுக்கு பெண் பிள்ளைகள், ஆண்கள் சேர்ந்துக்கொண்டு கூத்தடிக்கின்றனர். எனக்கு அரசு அதிகாரம் பவர் இருந்தால், அங்கு ஆடுகிற அத்தனை பேருக்கும் ஆயுள் தண்டனை போடுவேன். யார் மகளோ, யார் மகனோ இப்படி சேர்ந்துக்கொண்டு ஆடுவது இதுவா நமது கலாசாரம்?

- Advertisement -

இதை பத்திரிகை, மீடியா ஆதரவு தந்து, அதுபற்றிய செய்திகளை தருகிறது. இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இல்லை என்றால், மிகப்பெரிய கலாசார சீரழிவை ஏற்படுத்தும். முதலில் தொடர்பு சாதனமாக இருந்த போன், இப்போது எப்படி ஆபாச படங்கள் பார்த்து இளம் வயதினர் கெட்டுப் போகும் ஒரு சாதனமாக மாறியதோ, அதுபோன்றுதான் இதுவும் மாறும்.

இந்த ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்டீரிட் போன்ற தவறான பழக்கங்களை புறக்கணித்து விட்டு, நமது கலாசாரமான வள்ளி கும்மி போன்றவற்றை நாம் ஆதரிக்க வேண்டும். அழகாக புடவை கட்டி, பெண்கள் நளினமாக ஆடிப்பாடும், அருகில் இருந்து கணவர்கள் ரசிக்கும் வள்ளி கும்மி போன்றவற்றுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும், என்று கூறி இருக்கிறார் நடிகர் ரஞ்சித்

- Advertisement -

சற்று முன்