சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, திடீர்ன்னு ஒரு நாள் எங்க டைரக்டர் எனக்கு போன் பண்ணினார். நாகேஷ் உன்னை பார்க்கணும்ன்னு வந்துட்டு இருக்கிறார். என்னான்னு தெரியலே. என்னமோ உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். ஷெட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கேன் பார்த்துக்கோ அப்படீன்னு சொல்லிட்டார்.
எனக்கு நாகேஷ் சார் வர்றார்ன்னு சொன்ன உடனே கை கால் எல்லாம் உதறுது. நாகேஷ் சார் இங்கே செட்டுக்கு வர்றார் என்றவுடன் பதட்டமா இருந்தது. அடுத்த 10 நிமிஷத்துல கார் வந்துடுச்சு. யார் அவன் சமுத்திரக்கனி? அப்படீன்னு கேட்டுட்டு நாகேஷ் சார் ஷெட்டுக்குள்ள வர்றார்.
நான்தான் என்று அவரிடம் சொன்னதும், நீதானா ரொம்ப சின்ன பையனா இருக்கே? நா யாரோ பெரிய ஆளா இருப்பான்னு நெனைச்சேன் என்றார். அப்புறம் என் தோள்ல கையை போட்டுட்டு எங்கே எடு நான் பார்க்கறேன் என்று ஷூட்டிங்கை பார்க்க சேர் போட்டு அங்கேயே உட்கார்ந்துட்டார்.
என்னத்தை நான் எடுக்கறது? அந்த நேரம் பார்த்து ஷெட்டுல இருந்த நம்மாளுங்க எல்லாம் நாகேஷை பார்த்து பதறிப் போய் சொதப்பாறங்க. ஷாட் வெச்சாச்சு. அப்போ நாகேஷ் சார் என்கிட்ட, நான் நடிச்சு காட்டவா என்று கேட்டார். ஐயா போங்க என்று சொல்லிவிட்டு கேமராவை ஓட விடச் சொல்லிட்டேன்.
3 பேர் நடிக்க வேண்டிய கேரக்டர்ல மாறி மாறி நின்னு அவர் நடிச்சு நடிச்சு காட்டறார். இதை தான் அவன் கேட்கிறான். பண்ணுங்க என்று அவர்களிடம் சொல்லிவிட்டு என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். என் வாழ்க்கையில் கிடைக்காத ஒரு அற்புதம் நடந்துச்சு. அரைமணி நேரம் என்கூட இருந்துட்டு வா ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிட்டார்.
ஐயா நான்தானே எடுத்துக்கலாமான்னு கேட்கணும் என்று நினைத்தேன். அவரே என்கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு சரி நான் கிளம்பறேன் என்று சொல்லிட்டு போயிட்டார். இது என் வாழ்க்கையில் இன்று வரை எதிர்பார்க்காத ஒரு சந்தோஷமான நிகழ்வாக இன்றும் இருந்து வருகிறது என்று இயக்குனர் சமுத்திரக்கனி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





