- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராப் ஆன செல்வராகவன் புராஜெக்ட், அஜித்-தனுஷ் இணைந்து நடிக்கும் புதிய படம், ஆனால் அங்கதான் ஒரு...

டிராப் ஆன செல்வராகவன் புராஜெக்ட், அஜித்-தனுஷ் இணைந்து நடிக்கும் புதிய படம், ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்

- Advertisement -

செல்வராகவன் திரைப்படங்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. எனினும் அவரது திரைப்படங்கள் பல வெளிவந்தபோது சரியாக போகவில்லை என்றாலும் பல வருடங்கள் கழித்து கொண்டாடப்படும். “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன” ஆகிய திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.

ஆனால் அத்திரைப்படங்களுக்கு முன்பு அவர் இயக்கிய “காதல் கொண்டேன்”, “7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை” ஆகிய திரைப்படங்கள் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படங்களாக அமைந்தது.

- Advertisement -

இத்திரைப்படங்களில் “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய திரைப்படங்களின் இரண்டாம் பாகம் குறித்து சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் “ஆயிரத்தில் ஒருவன் 2” வருகிற 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளிவந்தது.

ஆனால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தான தகவல் இது வரை வெளிவரவில்லை. இந்த நிலையில் வலைப்பேச்சு சக்தி, ஒரு புதிய தகவலை தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது “இரண்டாம் உலகம்” திரைப்படத்திற்கு முன்பு செல்வராகவன் அஜித்-தனுஷ்-பரத் ஆகியோரை இணைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தாராம். அதற்கான கதையையும் எழுதி தனுஷிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் “இரண்டாம் உலகம்” படுதோல்வியடைந்ததால் அந்த புராஜெக்ட் தொடங்கப்படவே இல்லையாம். இந்த நிலையில் தற்போது தனுஷ், செல்வராகவனிடம் அந்த கதையை படமாக்கலாம் என கூறியுள்ளாராம். அதில் அஜித்திற்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என தனுஷ் யோசனை கூறினாராம். விரைவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்-பரத் மற்றும் வேறொரு நடிகர் நடிக்க உள்ள திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

- Advertisement -

சற்று முன்